இலங்கை செய்தி

மாமாவை பழிதீர்க்கவே மகளை கடத்தியதாக சந்தேகநபர் தெரிவிப்பு 

பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞன் மாணவியை கடத்தியமைக்கான காரணத்தை வௌிப்படுத்தியுள்ளார்.

குறித்த சந்தேகநபர், தனது மாமாவின் மகளையே இவ்வாறு கடத்திச் சென்றுள்ளதாக தெரிதெரிவித்துள்ளார்.

பொலிஸ் காவலில் உள்ள சந்தேகநபர், ஜப்பானில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்ததாகவும், அங்கு சம்பாதித்த பணத்தை தனது மாமாவிடம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

பணம் தனக்குத் திருப்பித் தரப்படாததால், இதுபோன்ற செயலைச் செய்யத் தூண்டப்பட்டதாகவும் சந்தேகநபர் கூறியுள்ளார்.

தவுலகல பகுதியில் தொழிலதிபர் ஒருவரின் 18 வயது மகள் கடத்தப்பட்ட நிலையில், கடத்தப்பட்ட மாணவி மற்றும் சந்தேகநபரை கைது செய்ய 5 பொலிஸ் குழுக்களை பயன்படுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன்படி, கடத்தலை மேற்கொண்ட சந்தேகநபரின் கைப்பேசி தரவுகளை பகுப்பாய்வு செய்ததில், சந்தேகநபர் அம்பாறை பொலிஸ் பிரிவில் இருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அம்பாறை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகநபரும் சிறுமியும் இன்று (13) காலை அம்பாறை பேருந்து நிலையத்திலிருந்து கண்டிக்கு புறப்படும் சொகுசு பேருந்தில் இருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர் பொலிஸ் காவலில் இருப்பதாகவும், சிறுமியை வைத்தியவரிடம் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

(Visited 41 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை