ஆசியா

மலேசியாவில் காவல்நிலையத்திற்குள் புகுந்து மர்ம நபர் தாக்குதல் ; 2 அதிகாரிகள் உட்பட மூவர் பலி!

மலேசியாவில் ஜோகூர் மாநிலத்தின் உலு திராம் காவல் நிலையத்தில் இன்று (மே 17) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், காவலர்கள் இருவர் உட்பட மூவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அதிகாலை 2 மணியளவில் ஆயுதமேந்தி, உலு திராம் காவல் நிலையத்துக்குச் சென்றதாகக் கூறப்பட்டது.

சந்தேகத்துக்குரிய அந்த நபர் காவல் நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவரை தாக்கியுள்ளார். அந்தக் காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இறந்த காவலரின் துப்பாக்கியை எடுத்து அந்த நபர், சத்தம் கேட்டு ஓடிவந்த மற்றொரு காவலரையும் சுட்டுக் கொன்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த இடத்திற்கு விரைந்த மூன்றாவது காவலர், இந்த தாக்குதல்தாரியை சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டது.மூவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

தாக்குதலுக்கான நோக்கம் குறித்து மலேசியக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறது. தாக்குதல்தாரி மனநலம் பாதிக்கப்பட்டவரா என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுவதாகத் தெரிகிறது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content