ஐரோப்பா

ஜெர்மனியில் துப்புரவு பணியாளரின் உதவியுடன் நடந்த அறுவைச் சிகிச்சை – மருத்துவரின் நிலை

ஜெர்மனியில் கால்விரலை வெட்டி எடுக்கும் அறுவைச் சிகிச்சைக்கு மருத்துவமனையின் துப்புரவாளர் ஒருவர் உதவிக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளார்.

அவரை பயன்படுத்திய மருத்துவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.

அந்தச் சம்பவம் 2020ஆம் ஆண்டு மெயின்ஸ் (Mainz) பல்கலைக்கழக மருத்துவமனையில் நடந்ததாக உள்ளூர் ஊடகம் தெரிவித்தது.
விளம்பரம்

ஆனால் அது குறித்த விவரம் நேற்று முன்தினம் தான் வெளியானது. எப்படியிருப்பினும் இந்த நடவடிக்கையால் நோயாளிக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

தகுதிபெற்ற உதவியாளர் யாரும் இல்லை என்றபோதும் அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவர் தவறாய் முடிவெடுத்ததாக மருத்துவமனையின் தலைமை நிர்வாகி கூறினார்.

நோயாளியின் காலைப் பிடித்துக்கொள்ளவும் அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான கருவிகளை எடுத்துக்கொடுக்கவும் அந்தத் துப்புரவாளர் உதவியதாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனை நிர்வாகி அறுவைச் சிகிச்சை அறையில் துப்புரவாளரைக் கண்டபோது என்ன நடந்தது என்பது தெரியவந்தது

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!