கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக சுஜாதா குலேந்திரகுமார் நியமனம்
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக மட்டக்களப்பு வலய கல்விப் பணிபாபாளராக கடமையாற்றிய சுஜாதா குலேந்திரகுமார் தனது கடமைகளை கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் இன்று (02) பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திசாநாயக உள்ளிட்ட உயரதிகாரிகள் பலர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.






