இலங்கை

டெங்கு நோயால் அதிகம் பாதிக்கப்படும் மாணவர்கள் : சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

இலங்கையில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் 25 வீதமானோர் மாணவர்கள் என  தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

பாடசாலைகள் ஊடாக டெங்கு பரவுவதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் எனவும் அச் சபையின் பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரத்ன வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் கடந்த சில மாதங்களில் 42,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர்,  மொத்த டெங்கு நோயாளர்களில் 50% பேர் மேல் மாகாணத்தில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டின் வரலாற்றில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள ஆண்டாக இந்த வருடம் அமையும் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலை மேலும் மோசமடைந்து பாரியளவில் டெங்கு பரவும் அபாயம் உள்ளதாக தொற்றுநோயியல் நிபுணர்கள் மேலும் எச்சரிக்கின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!