இலங்கை

இலங்கையில் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த மாணவர்கள் : அதிபர் மற்றும் ஆசிரியர் விளக்கமறியலில்

அம்பாறையில் ஐந்து மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அதிபர் மற்றும் ஆசிரியர் ஒருவரையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இருவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்களை உழவு இயந்திரத்தில் வீட்டிற்கு கொண்டு செல்லுமாறு அதிபர் அறிவுறுத்தியதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த பாதையின் ஆபத்தான நிலைமைகள் காரணமாக அந்த வீதியை பயன்படுத்த வேண்டாம் என இராணுவம் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

11 மாணவர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் பலத்த நீரோட்டத்தில் கவிழ்ந்தது. ஐந்து மாணவர்கள் மீட்கப்பட்ட நிலையில், ஐந்து பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி, ஒருவர் காணாமல் போயுள்ளார்.

அதிகாரிகள் கவனக்குறைவாக இருந்ததாக சந்தேக நபர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!