இலங்கை

நீர்கொழும்பில் மர்ம காய்ச்சலால் மாணவன் மரணம்

காய்ச்சல் காரணமாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தனது ஒரே மகன் ஞாயிற்றுக்கிழமை (06) காலை உயிரிழந்துள்ளதாக மேற்படி மாணவனின் தந்தை எம்.என்.இஸ்திகார் தெரிவித்தார்.

அப்துல் அஸீஸ் என்ற பதின்மூன்று வயது சிறுவனே உயிரிழந்துள்ளார். இவர் நீர்கொழும்பு, நீர்கொழும்பு அல்-ஹிலால் தேசிய பாடசாலையில் தரம் 8 இல் கல்வி பயின்று வந்தார்.

சிறுவனின் மரணம் குறித்து தந்தை கருத்து தெரிவிக்கையில்,இரண்டு நாட்களுக்கு முன்பு, அவனுக்கு தலைவலியுடன் காய்ச்சல் ஏற்பட்டது. அவ்வப்போது காய்ச்சல் குறைந்து கொண்டே வந்தது. பின்னர் சனிக்கிழமை (05) இரவு எனது மகன் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்துள்ளார்.

இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக இரவு 10.30 மணியளவில் எமது மகனை நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதித்தோம். அங்கு மகன் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.டாக்டர்கள் பெரும் முயற்சி மேற்கொண்டனர். என் மகன் இரவு உணவைக் கூட எடுத்துக் கொண்டான். ஆனால் மகனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. எனது மகன் ஞாயிற்றுக்கிழமை (06) அதிகாலை 12.20 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

மாணவனின் சடலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 11 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content