இலங்கை செய்தி

தாமரை கோபுரத்திலிருந்து விழுந்து மாணவி மரணம் – 5 பேரிடம் சாட்சியங்கள் பதிவு

கொழும்பு தாமரை கோபுரத்திலிருந்து பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட 16 வயதுடைய பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் இதுவரை 5 பேரிடம் சாட்சியங்களைப் பதிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த மாணவியின் பிரேதப் பரிசோதனை நேற்று நடத்தப்பட்டதுடன், பலத்த காயங்கள் காரணமாகக் குறித்த மரணம் சம்பவித்துள்ளதாக அதன்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் மதியம் பாடசாலை சீருடையுடன் தாமரை கோபுரத்துக்கு வருகைதந்த குறித்த மாணவி குறுகிய காலத்தில் பல தடவைகள் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அங்கு பிரவேசித்த 15 முதல் 20 நிமிடங்களுக்குள் அவர் பல தடவைகள் கீழே குதிப்பதற்கு முயன்றுள்ள காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராக்களில் பதிவாகியுள்ளன.

எனினும், மாணவி உயிரை மாய்த்துக் கொண்டமைக்கான காரணம் வெளியாகவில்லை.

எவ்வாறாயினும், இவர், சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் கொம்பனி தெருவிலுள்ள தொடர் மாடிக் கட்டடத்திலிருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட 15 வயதுடைய மாணவன் மற்றும் மாணவியின் நெருங்கிய நண்பி எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

(Visited 33 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
Skip to content