இலங்கை

மொனராகலையில் கேள்வி கேட்ட ஆசிரியரை தாக்கிய மாணவன்!

மொனராகலை நகரத்தில் உள்ள ஒரு முன்னணி பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் அவ் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவனால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தரம் 11 இல் கல்வி கற்கும் குறித்த மாணவன் பாடசாலைக்கு தொலைபேசி, பவர் பேங்க் ஆகியவற்றை எடுத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில் தொழில்நுட்ப பாடத்திற்கு பொறுப்பான ஆசிரியர், மாணவரிடம் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

இதன்போது குறித்த மாணவன் ஆசிரியரை தாக்கியதாகவும், அவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாணவர் மொனராகலையில் உள்ள சிரிகலவில் வசிப்பவர் என்று கூறப்படுகிறது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!