இலங்கையின் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தல்

இலங்கையில் மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாளைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளதனை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் மக்கள் தங்களது உடமைகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்துடன் தீபாவளி கொண்டாட்டங்கள் இடம்பெறும் பகுதிகளில் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபரால், சகல அனைத்து பொலிஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
(Visited 26 times, 1 visits today)