இலங்கை

இலங்கை பொலிஸாரின் யுக்திய நடவடிக்கை : 418 சந்தேக நபர்கள் கைது!

நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையின் கீழ், இன்று (18.02) நண்பகல் 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் 418 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களில் 8 பேருக்கு எதிராக தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட 2 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும்   113 பேர் போதைப்பொருள் அல்லாத குற்றச்சாட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கைப்பற்றப்பட்ட  போதைப் பொருட்களில் 133 கிராம் ஹெரோயின், 103 கிராம் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்), கிட்டத்தட்ட 8 கிலோ கஞ்சா மற்றும் 447 போதை மாத்திரைகள் அடங்குவதாக கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!