ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு – அமெரிக்காவுடன் கப்பல்கள் அனுப்ப பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளுக்கு ட்ரம்ப் அழைப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாக்க அமெரிக்காவுடன் இணைந்து கடற்படைக் கப்பல்களை அனுப்புமாறு பிரித்தானியா மற்றும் பிற நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட பதிவில், “ஈரான் அந்த பாதையை மூட முயற்சித்தாலும், ஹார்முஸ் நீரிணையை விரைவில் திறந்த, பாதுகாப்பான மற்றும் சுதந்திரமான கடற்பாதையாக மாற்றுவோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பின் தகவல்படி, போர் தொடங்கியதிலிருந்து வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரிணை பகுதியில் 16 கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
இதனிடையே, ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, நீரிணையில் போக்குவரத்து தடுக்கப்படும் நடவடிக்கையைத் தொடருவதாக தனது முதல் பொது அறிக்கையில் உறுதியளித்துள்ளார்.
மேலும், மத்திய கிழக்கு முழுவதும் தாக்குதல்கள் தொடர்கின்றன. ஜெருசலேமில், ஈரானிலிருந்து புதிய ஏவுகணை தாக்குதல்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் 120 பாடசாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக ஈரான் அரசு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.




