இறப்புகளை பதிவு செய்வதற்கு சிறப்பு நடவடிக்கை
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் இறந்தவர்களின் அல்லது காணாமல் போனவர்களின் இறப்புகளை பதிவு செய்வதற்குத் தேவையான சட்ட விதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் கூறுகிறது.
இந்தப் பேரிடர் காரணமாக ஒரு நபர், உறவினர் அல்லது நெருங்கிய நண்பர் காணாமல் போயிருந்தால், அந்த காணாமல் போனவர்களின் இறப்புகளைப் பதிவு செய்வதற்குத் தேவையான சட்ட விதிகள் செய்யப்பட்டுள்ளது.
காணாமல் போன ஒருவரின் மரணத்தைப் பதிவு செய்வதற்கு, தகவல் மற்றும் உண்மைகளை உறுதிப்படுத்தும் பிரமாணப் பத்திரம் அடங்கிய விண்ணப்பப் படிவத்தை கிராம அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றால், பிரதேச செயலாளர் அதை துணை அல்லது உதவிப் பதிவாளர் நாயகத்திடம் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்க வேண்டும்.
ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டால், விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.




