இலங்கை – இந்த மாதத்தில் இருந்து டிஜிட்டல் அடையாள அடைகளை வழங்க நடவடிக்கை!

இந்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.
இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், புதிதாக வழங்கப்படும் அனைத்து அடையாள அட்டைகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று நம்புவதாகக் கூறினார்.
அடையாள அட்டைகளைப் பெறுவதில் ஏற்கனவே குறிப்பிடத்தக்க தாமதம் ஏற்பட்டுள்ளதால், அதைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் துணை அமைச்சர் கூறினார்.
டிஜிட்டல் அடையாள அட்டை முறையை உருவாக்குவதற்கு சுமார் 20 பில்லியன் ரூபாய் செலவாகும் என்பதால், அதில் பாதியை இந்திய உதவி மூலம் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக துணை அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
(Visited 24 times, 1 visits today)