இலங்கை செய்தி

இஸ்ரேலில் இலங்கையர்களின் நிலை!! தூதுவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார

இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் அங்குள்ள வெளிநாட்டுத் தூதுவர்களுடனும் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் கூறுகிறார்.

இன்று (11) இஸ்ரேலில் இருந்த மூன்று இலங்கையர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக தூதுவர் குறிப்பிடுகிறார்.

சுஜித் பிரியங்கரா என்ற இலங்கையர், படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய போதிலும், தூதரகம் அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவருக்கு தேவையான சிகிச்சைகள் தொடர்பிலும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போன மற்றுமொரு பெண் மற்றும் ஒரு இளைஞன் பற்றிய செய்திகள் எதுவும் இல்லை என்றும் தூதுவர் வலியுறுத்துகிறார்.

(Visited 8 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை