மத்திய கிழக்கு

காசாவில் பட்டினியால் வாடும் மக்கள்!

காஸாவில் பெரும்பாலான மக்கள் பட்டினியால் வாடுவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

இதனை வெளிப்படுத்திய ஐக்கிய நாடுகளின் உணவுத் திட்டத்தின் பிரதிப் பணிப்பாளர், பத்தில் ஒன்பது பேருக்கு தினசரி உணவு கூட கிடைக்காத நிலை காணப்படுவதாகக் கூறுகிறார்.

காஸா பகுதிக்கு தேவையான உணவு உதவிகளில் பாதி கூட அதை சென்றடைவதில்லை எனவும், அதற்கு உணவு அனுப்பவே முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேலிய தாக்குதல்களால் காஸாவில் 17,700 பேர் இறந்துள்ளனர், அங்கு வசிக்கும் 2.3 மில்லியன் மக்களில் பெரும்பான்மையானவர்கள் ஏற்கனவே இடம்பெயர்ந்துள்ளனர்.

இதேவேளை, ஹமாஸ் அமைப்பினால் பிணையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை அரசாங்கம் விடுவிக்கக் கோரி டெல் அவிவ் நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.

You cannot copy content of this page

Skip to content