பனிமூட்டம் காரணமாக 4வது டி20 போட்டி ஆரம்பிப்பதில் தாமதம்
பிரபல தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
இந்த சுற்றுப்பயணத்தில் இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் தொடரில் இந்திய அணி 2-1 கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இன்று உத்தரபிரதேச(Uttar Pradesh) மாநில தலைநகர் லக்னோவில்(Lucknow) நான்காவது போட்டி ஆரம்பமாக இருந்தது.
இந்நிலையில், கடும் பனிமூட்டம் காரணமாக போட்டி ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக உத்தரப்பிரதேசத்தில் நேற்று பனிமூட்டம் காரணமாக ஏற்பட்ட வாகன விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
தொடர்புடைய செய்தி
இந்தியாவில் 11 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – 13 பேர் பலி!





