இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

பிரித்தானியாவில் குடியுரிமை பெற காத்திருப்பவர்களுக்கு கடுமையாகும் சட்டம் – பிரதமர் அறிவிப்பு

பிரித்தானியாவில் குடியேற்ற அளவு கணிசமாகக் குறைக்கப்படும் என பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உறுதியளித்துள்ளார்.

திங்கட்கிழமை காலை ஒரு செய்தியாளர் கூட்டத்தில், நிகர இடம்பெயர்வைக் குறைப்பதற்கான தொழிற்கட்சியின் விரிவான திட்டத்தை பிரதமர் வெளியிட்டுள்ளார்.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, வெளிநாட்டு தொழிலாளர்கள் கடுமையான விசா கட்டுப்பாடுகளை எதிர்கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியாவில் குடியுரிமை பெற இனிமேல் 10 வருடங்கள் காத்திருக்க வேண்டுமென பிரதமர் அறிவித்துள்ளார்.

குடியேற்றவாசிகள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் முன், அவர்கள் ஒரு தசாப்தம் வரை பிரித்தானியாவில் செலவிட வேண்டும்.

மேலும் ஆங்கில மொழித் தேவைகள் அதிகரிக்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை காலமும் 5 வருடங்களில் குடியுரிமை வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!