இலங்கை

தமிழரசு கட்சியின் உறுப்பினர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடிய சிறிதரன் எம்.பி !

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்குப் போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனுக்கும், தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு (31) ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டப் பணிமனையில் நடைபெற்றது.

இதில் உரையாற்றிய எஸ்.சிறிதரன் தான் தலைவராகத் தெரிவு செய்யப்படுமிடத்து, தமிழ் மக்களிடையே கட்சியின் செல்வாக்கை வளர்க்கவும், தமிழர் உரிமைகளை மீட்டெடுக்கவும், தமிழ் தேசியத்தை முன்னெடுத்துச் செல்லவும், கூட்டு செயற்பாட்டை மேம்படுத்தவும், புலம்பெயர் தமிழரோடு சிறந்த உறவைப் பேணவும் அயராது உழைப்பேன் என்று உறுதியளித்தார்.

மேலும் மாவட்டங்கள் சார்ந்த முடிவுகளை எடுக்கும் பொழுது மாவட்டக் கிளைகளோடு கலந்தாலோசித்து முடிவெடுப்பேன் என்றும் கூறினார்.

இறுதியில் உறுப்பினர்களது வினாக்களுக்கு அவர் பதிலளித்தார்.திருக்கோணமலை மாவட்டக் கிளையானது, தனது உறுப்பினர் தத்தம் மனசாட்சிப்படி தலைவர் தேர்தலில் வாக்களிக்கலாம் என்று அறிவித்தது.

(Visited 18 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!