இலங்கையின் கடற்பரப்புகள் கொந்தளிப்பாக காணப்படும் – மக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையில் கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் கொந்தளிப்பாக காணப்படும் என்பதுடன், கடும் மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பேருவளையிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன், கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடற்பரப்புகளை அண்மித்து வாழும் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
(Visited 48 times, 1 visits today)