இலங்கை

இலங்கை திவாலானதாக அரசாங்கம் அறிவிக்கவில்லை – மத்திய வங்கி ஆளுனர்!

இலங்கையை திவாலானதாக அரசாங்கம் ஒருபோதும் அறிவிக்கவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர்  நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் வங்குரோத்து நிலை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சில வெளிநாட்டு கடனாளிகளுக்கு கடன் தவணையை செலுத்த முடியாது என அறிவித்த ஒரு சந்தர்ப்பம் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக நாடு மூடப்பட்டமையே நாட்டில் பொருளாதார நெருக்கடியை உருவாக்குவதற்கு முக்கிய காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!