இலங்கை செய்தி

இலங்கையின் பிரிக்ஸ் அங்கத்துவ விண்ணப்பம் நிராகரிப்பு

பிரிக்ஸ் அமைப்பின் நிரந்தர அங்கத்துவ அமைப்பு நாடாக விண்ணப்பித்த இலங்கையின் விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டுள்ளதாக வெளிநாட்டு அமைச்சர் விஜித ஹேரத் கூறினார்

நிரந்தர உறுப்பினர்களின் அங்கத்துவத்தில் செயல்படுத்துவதற்கு மேற்கொள்ளபட்டுள்ள தீர்மானத்திற்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் எனினும் சாதாரண உறுப்பு நாடாக இலங்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதற்கிணங்க அங்கத்துவ நாடுகளுக்கு நிதி உதவி வழங்கும் பிரிக்ஸ் அபிவிருத்தி வங்கியில் இணையவும் அனுமதி கிடைத்து உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே பிரிக்ஸ் அபிவிருத்தி வங்கியில் இணையும் அனுமதியை?அமைச்சரவை வழங்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

உலகில் துரிதமாக முன்னேறிவரும் நாடுகளுக்கு இடையில் இந்த பிரிக்ஸ் நாணய அலகுப் பாவனை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா, சீனா, ஈரான், பிரேசில், தென்னாபிரிக்கா, இந்தியா, எகிப்து, எதியோப்பியா, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் தற்போது அங்கம் வைக்கின்றன

(Visited 15 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை