இலங்கை

இஸ்ரேலில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்கையர்கள் : பணியில் ஏற்பட்ட மாற்றத்தால் நேர்ந்த கதி!

இஸ்ரேலுக்கு வேலைக்குச் சென்ற 17 இலங்கையர்களை நாடு கடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விவசாயத் துறையில் வேலை விசாவில் இஸ்ரேலுக்கு வந்தவர்கள் அந்தப் பணியிடங்களிலிருந்து தப்பிச் சென்று பேக்கரிகளில் பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பணியாற்றுபவர்கள்  உள்ளூர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர்  நிமல் பண்டார கூறுகிறார்.

இஸ்ரேல் வெளிநாட்டு பணியாளர்களை தொடர்ந்து கண்காணித்து வரும் நாடு என தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாட்டுப் பணியாளர்கள் இஸ்ரேலில் பணிக்கு வந்த பின்னர் அவர்களது விசா வகையை வேறு விசா வகைக்கு மாற்றுவதற்கான சட்டச் சூழல் இல்லை என இஸ்ரேல் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, தாதியர் பணிக்காக ஒரு வருடத்திற்கு முன்னர் இஸ்ரேலுக்கு வந்த இலங்கைப் பெண் ஒருவரும் சேவை நிபந்தனைகளை மீறியதன் காரணமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக திருட்டு குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கையர் ஒருவரை நாடு கடத்த இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

(Visited 72 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!