இலங்கை செய்தி

வெளிநாடு ஒன்றில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கையர்கள்

வேலை ஒப்பந்தத்தை மீறிய குற்றச்சாட்டில் இஸ்ரேலுக்கு வேலைக்குச் சென்ற 17 இலங்கையர்களை நாடு கடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் விவசாயத் துறையில் வேலை விசாவில் இஸ்ரேலுக்கு வந்ததாகவும், அந்தப் பணியிடங்களை விட்டு ஓடி பேக்கரிகளில் வேலை செய்து கொண்டிருந்த போது உள்ளூர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகவும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.

இஸ்ரேலில் பணிபுரிய வரும் வெளிநாட்டு பணியாளர்கள் தங்களது விசா வகையை மற்றொரு விசா வகைக்கு மாற்றுவதற்கு சட்டப்பூர்வ அனுமதி கிடையாது என இஸ்ரேல் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, ஒரு வருடத்திற்கு முன்னர் இஸ்ரேலுக்கு தாதியாக பணிபுரிய வந்த இலங்கை பெண் ஒருவரும் சேவை நிபந்தனைகளை மீறியதன் காரணமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்தார்.

முன்னதாக திருட்டு குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கையர் ஒருவரை நாடு கடத்த அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!