இலங்கை

கொழும்பு நோக்கி வந்த விமானத்தில் உயிரிழந்த இலங்கை பெண்

டுபாயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வெளிநாட்டு விமானத்தில் இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக கராச்சி விமான நிலையத்தில் விமானம் திடீரென நேற்று தரையிறக்கப்பட்டுள்ளது. இதில் 57 வயதான பலவினி பெண் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெண்ணின் உடல்நிலை மோசமானதால், மருத்துவ உதவி பெறுவதற்காக, கராச்சியில் உள்ள விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளரின் அனுமதியுடன் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த பெண் பயணியை பரிசோதிப்பதற்காக மருத்துவர்கள் விமானத்தில் ஏறிய பரிசோதித்துள்ளனர்.

எனினும் குறித்த பெண் மாரடைப்பு காரணமாக ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்தில் இயங்கும் சுகாதார அதிகாரியினால் பெண்ணின் இறப்புச் சான்றிதழை வழங்கப்பட்டுள்ளது.

தேவையான ஏற்பாடுகளை பூர்த்தி செய்ததன் பின்னர், கராச்சி விமான நிலையத்திலிருந்து அவரது உடலை ஏற்றிய விமானம் கொழும்பை வந்தடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

(Visited 45 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!