இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

வேலை நிறுத்தத்தை கைவிட்ட இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்

ரயில் நிலைய அதிபர்கள் இன்று தங்களது வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட முடிவு செய்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புகையிரத நிலைய அதிபர்கள் நேற்று மாலை 4.30 மணி முதல் அனைத்து பயணச்சீட்டு கடமைகளிலிருந்தும் விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்

எவ்வாறாயினும், புகையிரத சேவையில் எவ்வித இடையூறும் ஏற்படாது என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சருடனான கலந்துரையாடலின் போது தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

புகையிரத நிலைய அதிபர்கள் பதவி தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்து உடனடியாக தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும், புகையிரத நிலைய அதிபர்களின் பதவி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளிடம் இருந்து பலமுறை கோரிக்கை விடுத்தும் சாதகமான பதில் கிடைக்காததால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்ததாக சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன தெரிவித்துள்ளார்.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!