இலங்கை

நாட்டை விட்டு வெளியேறிய இலங்கை ஜனாதிபதி : ஐவருக்கு வழங்கப்பட்ட நியமனங்கள்!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், 05 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் கீழ் காணப்படும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி மற்றும் கொள்வனவு மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு மற்றும் தொழிலாளர் அமைச்சு ஆகியவற்றுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி எரங்க வீரரத்ன, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர், டிஜிட்டல் பொருளாதாரத்தின் பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* பாதுகாப்பு பிரதி அமைச்சர் திரு. அருண ஜயசேகர, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்

* கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* வெளிவிவகார பிரதி அமைச்சர் திரு. அருண் ஹேமச்சந்திர வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, பதில் தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!