இலங்கை

தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் அறிவிப்பு!

சம்பள உயர்வு வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் வாரம் முதல் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி ஒக்டோபர் 23ஆம் திகதி கூடிய அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் துறைமுக ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு இடைநிறுத்தப்பட்டது.

இதனால் துறைமுக ஊழியர்கள் மத்தியில் ஊதிய உயர்வு குறித்த பிரச்சினை எழுந்துள்ளது.

இந்நிலையில் அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் இது தொடர்பில் சந்தித்து கலந்துரையாடினார். எனினும், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிரோஷன் கோரகனே தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு குறித்த சங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content