தலைக்கவசம் அணிபவர்களுக்கு இலங்கை காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை.
தலைக்கவசம் அணிந்திருப்பவர்கள் தங்கள் அடையாளத்தை சரிபார்க்க முடியாவிட்டால், அவர்களைக் கைது செய்ய காவல்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இருப்பதாக இலங்கை காவல்துறை கூறுகிறது.
ஹெல்மெட் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்களை சோதனை செய்ய அதிகாரிகளுக்கு அனுமதி உண்டு என்று காவல்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
ஆய்வுகளின் போது ஒத்துழைக்குமாறு தனிநபர்களைக் கேட்டுக்கொண்ட காவல்துறை, அவ்வாறு செய்யத் தவறுபவர்களைக் கைது செய்யும் அதிகாரம் அதிகாரிகளுக்கு உள்ளது என்றார்.





