இலங்கை

இலங்கை சென்றவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

இலங்கை விமானப் பயணி ஒருவர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

ஏழரை மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டு சென்றவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் கண்டி, கம்பளை பகுதியில் வசிக்கும் 25 வயதுடைய தொழிலதிபர் ஆவார்.

அவர் இந்த சிகரெட்டுகளை டுபாயில் கொள்வனவு செய்து, பஹ்ரைனுக்குப் பயணம் செய்து, அங்கிருந்து கல்ப் ஏர் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவர் எடுத்துச் வந்த நான்கு சூட்கேஸ்களில் 50,000 வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகள் அடங்கிய 250 சிகரெட் அட்டைப்பெட்டிகளை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அதிகாரிகள் அவரைக் காவலில் எடுத்து, இந்த விவகாரம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நெத் நியூஸ் செய்தியாளர் தெரிவித்தார்.

(Visited 16 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்