இலங்கை

ரஷ்யாவிற்கு விஜயம் செய்யும் இலங்கைப் பிரதிநிதிகள்!

ஜூன் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் இராணுவ நோக்கங்களுக்காக ரஷ்யாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இலங்கையின் முன்னாள் இராணுவத்தினரை நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தலைமையில் உயர்மட்ட குழுவொன்று ரஷ்யாவிற்கு செல்லவுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் Sergey Lavrov உடனான கலந்துரையாடலில் ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றும் இலங்கையின் முன்னாள் இராணுவத்தினரின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் சப்ரி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட இலங்கைப் பிரதிநிதிகள் ரஷ்ய அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக ரஷ்யாவிற்கு விஜயம் செய்யவுள்ளனர்.

தற்போது மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!