இலங்கை செய்தி

தாய்லாந்து எல்லையில் போலி மலேசிய கடவுச்சீட்டுடன் இலங்கையர் கைது

மலேசியாவின் கெடா குடிவரவுத் திணைக்களம், மலேசியா தாய்லாந்து எல்லைச் சோதனைச் சாவடியில் போலி மலேசியக் கடவுச்சீட்டை வைத்திருந்த இலங்கைப் பிரஜை ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

21 வயதான வெளிநாட்டவர் ‘ராஜா டேனி டெனிஸ்’ என்ற பெயர் கொண்ட கடவுச்சீட்டைப் பயன்படுத்தி தாய்லாந்திற்கு செல்ல முயன்றபோது, ​​குடிவரவு, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு (ICQS) வளாகத்தில் தடுத்து வைக்கப்பட்டதாக அதன் இயக்குனர் முகமட் ரிட்சுவான் முகமட் ஜைன் தெரிவித்தார்.

மலேசிய குடிமகனாக ஆள்மாறாட்டம் செய்து தாய்லாந்திற்கு செல்ல முயன்றபோது அந்த நபர் கைது செய்யப்பட்டார். எனினும், சோதனையில் அவரது பாஸ்போர்ட் செல்லாது என்று தெரியவந்ததையடுத்து, அவர் உடனடியாக தடுத்து வைக்கப்பட்டார்,” என்று அவர் தெரிவித்தார்.

செல்லுபடியாகும் பயண ஆவணம் இன்றி நாட்டிற்குள் நுழைந்து தங்கியிருந்தமைக்காக சந்தேகநபர் குடிவரவு சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக முகமட் ரிட்சுவான் குறிப்பிட்டார்.

“கெடா குடிவரவுத் துறைக்கும் எங்கள் தாய்லாந்து சகாக்களுக்கும் இடையிலான மூலோபாய ஒத்துழைப்பின் விளைவாக கைது செய்யப்பட்டது. இந்த போலி பாஸ்போர்ட்டின் பின்னணியில் உள்ள திட்டம் குறித்து முழு விசாரணை நடத்துவோம்,” என்று தெரிவித்தார்.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!