இலங்கை

இஸ்ரேலுக்கு சென்ற இலங்கை தூதுவரின் பயணம் இடைநிறுத்தம்!

இஸ்ரேல் – பலஸ்தீன மோதல்களுக்கு மத்தியில் காணாமல் போனதாக கூறப்படும் இலங்கையர்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக மேற்கு காசா பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை தூதுவர் தற்போதைய சூழ்நிலை காரணமாக விஜயத்தை நிறுத்த வேண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்பு தரப்பினர் விடுத்த அறிவித்தலின் பிரகாரம் தனது விஜயத்தை நிறுத்திவிட்டு நாடு திரும்ப நேரிட்டதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த மோதலில் இரு இலங்கையர்கள் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்காக நேற்று (11.10) இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர்  நிமல் பண்டார உள்ளிட்ட பிரதிநிதிகள் மேற்கு காசா பகுதிக்கு விஜயம் செய்தனர்.

எனினும், அப்பகுதியில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதால், அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவிப்பு வெளியிட்டனர். இதன்படி, காணாமல் போனதாகக் கூறப்படும் இலங்கையர்கள் தொடர்பில் இதுவரையில் குறிப்பிட்ட தகவல்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!