இலங்கை – யாழில் திருமணம் முடிந்து 15 நாட்களில் உயிரிழந்த இளம் பெண்!

யாழ்ப்பாணம் – வரணி பகுதியில் திருமணம் செய்து 15 நாட்களில் இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் வரணி வடக்கு பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணே வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். சடலம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
(Visited 1 times, 1 visits today)