இலங்கை

2025 ஆசிய பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கத்தை வென்ற இலங்கை!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2025 ஆசிய பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப்பில் 120 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட ரன்சிலு ஜெயதிலகே, அந்த எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா, டோங்கா மற்றும் சமோவாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்கள் பங்கேற்றனர். அங்கு தங்கப் பதக்கம் வென்ற ரன்சிலு ஜெயதிலகே, ஆசிய பசிபிக் பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப்பில் தனது மூன்றாவது தங்கப் பதக்கத்தையும் வென்றார்.

இது தொடர்பாக ரன்சிலு ஜெயதிலகே தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, மெல்போர்னில் 4,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களுக்கு முன்னால் சிங்கக் கொடியை உயர்த்த முடிந்தது என்று கூறியுள்ளார்.

தனக்கு பயிற்சியாளர், மேலாளர் அல்லது சம்பளம் இல்லை என்றும், ஆனால் ஒருபோதும் சிங்கக் கொடியை கீழே போட மாட்டேன் என்றும், விரைவில் உலக அரங்கில் சிங்கக் கொடியை உயர்த்துவேன் என்றும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!