இலங்கை

இலங்கை – சிவனொளிபாதமலையை பார்வையிட்டு திரும்பிய குடும்பத்திற்கு நேர்ந்த கதி!

இலங்கை – மஸ்கெலியா பிரதான வீதியின் மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்தில் கெப் வண்டியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கெப் வண்டியில் வந்தவர்கள் நேற்றைய தினம் சிவனொளிபாதமலையை பார்வையிட்டு கொடகல நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்த.

விபத்தின் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் குழுவொன்று இந்த வண்டியில் பயணித்துள்ளதுடன், ஏழு பேர் வண்டியில் பயணித்துள்ளனர்.

அவர்களில் ஐவர் காயமடைந்து மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமானதால் திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வண்டியில் பயணித்த சிறு குழந்தை மற்றும் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

கெப் வண்டியின் சாரதி தூங்கியதால் இந்த விபத்து நேர்ந்ததாகவும், விபத்தில் கெப் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!