இலங்கை

இலங்கை: இரண்டு வெவ்வேறு கொலைகள் தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

இன்று காலை 06.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் பதிவாகிய இருவேறு கொலைகள் தொடர்பில் 17 மற்றும் 18 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுராதபுரம், ஓயாமடுவ, பண்டாரகம பிரதேசத்தில் 26 வயதுடைய இளைஞன் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கூரிய பொருளால் தாக்கப்பட்டதால் உயிரிழந்துள்ளதாக ஓயாமடுவ பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரு தரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதையடுத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர், சந்தேகநபர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர். ஓயாமடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் 45 வயதுடைய நபரொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 18 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

45 வயதுடைய நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இரட்டை கெப் வண்டியில் வந்த குழுவொன்று கூரிய ஆயுதங்களால் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பயன்படுத்திய டபுள் கெப் வண்டியுடன் வவுனியாவைச் சேர்ந்த 18 வயது இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

(Visited 47 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்