இலங்கை

இலங்கை தொடருந்து நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் (SLRSMU) இன்று இரவு முதல் தமது தொடருந்து பணிப்புறக்கணிப்பை கைவிட தீர்மானித்துள்ளது.

அதன்படி இன்று நள்ளிரவுக்குள் கடமைக்கு சமூகமளிக்கும் உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என அமைச்சர் தொழிற்சங்க அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

பணிக்கு வராத அதிகாரிகள் இருந்தால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவும் கலந்து கொண்ட இந்த கலந்துரையாடல் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!