இலங்கை செய்தி

இலங்கையில் முட்டையின் விலையை 10 ரூபாவால் குறைக்க நடவடிக்கை

இலங்கையில் முட்டையின் விலையை 10 ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஹசித சந்தீப தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஹசித சந்தீப இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பெரிய அளவிலான முட்டை உற்பத்தியாளர்கள் நடத்தும் மாபியாவை நிறுத்தும் நோக்கில் இந்த வழியில் முட்டைகளின் விலையை குறைக்க சங்கம் முடிவு செய்துள்ளது.

முட்டைகளின் விலையை அதிகரிக்கும் நோக்கில், பல பெரிய அளவிலான முட்டை உற்பத்தியாளர்கள் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளை வாங்கி சந்தைக்கு அனுப்பாமல் சேமித்து வைப்பத்துள்ளனர்.

இதன் மூலம் நாட்டில் முட்டைகளின் பற்றாக்குறை இருப்பதாக பொய்யாகக் காட்ட முயற்சிப்பதாக ஹசித சந்தீப கூறினார்.

இந்த மாபியா சூழ்நிலையில், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முட்டை உற்பத்தியாளர்கள் சரிந்துவிடுவார்கள் என்று அவர் கூறினார்.

சிறு மற்றும் நடுத்தர அளவிலான முட்டை உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் நோக்கில் முட்டைகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!