இலங்கை செய்தி

இலங்கை: மித்தெனியவில் சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான மூன்று வாகனங்கள் பறிமுதல்

தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்(SLPP) முன்னாள் உள்ளூராட்சி வேட்பாளர் சம்பத் மனம்பேரிக்குச்(Sampath Manamperi) சொந்தமான மூன்று வாகனங்கள் மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் ஒரு பேருந்து, ஒரு கார் மற்றும் ஒரு கப் ரக வாகனம் ஆகியவை அடங்கும் தெரிவித்துள்ளனர்.

சம்பத் மனம்பேரியின் மித்தெனிய(Middeniya) பகுதியில் உள்ள வீட்டை சோதனை செய்த போதே குறிப்பிட்ட வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மித்தெனிய, தலாவ(Thalawa) பகுதியில் ஐஸ் போதைப்பொருளை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்திருந்தமை குற்றச்சாட்டில் சம்பத் மனம்பேரி அண்மையில் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

(Visited 3 times, 3 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!