இலங்கை செய்தி

இலங்கை: இரு இளைஞர்களை தாக்கிய மூன்று பொலிசார் பணி இடைநிறுத்தம்

வத்தளை, பமுனுகம பிரதேசத்தில் இரு இளைஞர்களை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பமுனுகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

பமுனுகம பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதாகக் கூறி பிரதேசவாசிகள் குழுவொன்று நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

பமுனுகம, போபிட்டிய பிரதேசத்தில் வீடொன்றை உடைத்து தங்க நகையை திருடிச் சென்ற இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 20 மற்றும் 24 வயதுடைய பமுனுகம மற்றும் செத்தபடுவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

எவ்வாறாயினும், குறித்த இளைஞர்கள் திருட்டில் ஈடுபடவில்லை என உறுதியளிக்கும் அதே வேளையில், இந்த இரண்டு இளைஞர்களையும் பொலிஸ் அதிகாரிகள் கொடூரமான முறையில் தாக்கியதாக பெற்றோர்களும் கிராம மக்களும் குற்றம் சுமத்துகின்றனர்.

பின்னர், துங்கல்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலையீட்டில், தாக்கப்பட்ட நபர்கள் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் நீதி வழங்கப்படும் என துங்கல்பிட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரி உறுதியளித்ததையடுத்து குழுவினர் கலைந்து சென்றனர்.

(Visited 62 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை