இலங்கை

இலங்கை: கல்வியமைச்சுக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் கைது!

பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் சுமார் 16,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களை, ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குமாறு கோரி கல்வியமைச்சுக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புடைய மேலும் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் கடுவலை பதில் நீதவான் டெலானீ முனசிங்க முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.

இதன்பின்னர், அவர்களில் இரண்டு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், மற்றொருவரை எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் முன்னதாக 4 பேர் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கல்வியமைச்சின் முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது 3 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!