இலங்கை – கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலையானர்!

இலங்கை – கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சமிந்து தில்ஷான் பியுமாங்கா என்ற சந்தேக நபர் இன்று (4) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இரண்டு சாட்சிகள் அங்கு அடையாளத்திற்காக ஆஜர்படுத்தப்பட்டனர், ஆனால் அவர்கள் சந்தேக நபரை அடையாளம் காணவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் சந்தேக நபர் கொழும்பு தலைமை நீதவான் திருமதி தனுஜா லக்மாலியின் உத்தியோகபூர்வ அறையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சந்தேக நபரை இந்த மாதம் 6 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அன்று, சந்தேக நபரை ஸ்கைப் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டது.