இலங்கை

இலங்கை : ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த மொட்டு கட்சியின் முக்கியஸ்தர்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தரப்புக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்புக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்குவதற்காக   கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் அல்லது தற்போதைய ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்கவை கட்சி ரீதியாக ஆதரிப்பார்களா என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படாத நிலையிலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்படி ஜனாதிபதி வேட்புமனுத் தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஜனாதிபதி வேட்புமனு தொடர்பில் எதிர்காலத்தில் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணி தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகவும், இணக்கப்பாடு இன்றி பேச்சுவார்த்தை முடிவடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி இன்று (28) ஜனாதிபதி மற்றும்   பசில் ராஜபக்ஷவிற்கு இடையில் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, பணிமனைகளின் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

விஜேராம மாவத்தையிலுள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (27) காலை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலேயே இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் ஒரு மணித்தியாலம் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதுடன், தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவளிக்குமாறு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் திரு.சாகல ரத்நாயக்க ஆகியோர் கடுமையாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கருத்தை திங்கட்கிழமை இடம்பெற்ற அரசியல் பீட கலந்துரையாடலின் பின்னர் அறிவிப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இங்கு குறிப்பிட்டுள்ளார்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content