இலங்கை : பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் சஜித்!
பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைய வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
வரவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தவும் கட்சியின் மூத்த தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது தொடர்பில் சஜித்திடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்துள்ள அவர், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்பதாகவும் பாராளுமன்ற தேர்தலில் பிரமர் வேட்பாளராக களமிறங்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
(Visited 15 times, 1 visits today)





