இலங்கை

இலங்கை: புதிய கட்சியொன்றை உருவாக்கத் தயாராகும் ரணில்

புதுமுகங்களை உள்ளடக்கி புதிய கட்சியொன்றை உருவாக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இது தொடர்பில் உரையாற்றினார்.

ரணில் விக்ரமசிங்க இதன் போது தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

நாடாளுமன்றத் தேர்தலைக் காட்டிலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் குறைவான வாக்குகளைப் பெற்று அரசாங்கம் முதல் தடவையாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

அரசாங்கத்தின் கடந்த கால நடவடிக்கைகளினால் மக்கள் ஆணை வழங்கியவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இப்போது நாம் புதிய கட்சி ஒன்றை உருவாக்க வேண்டும்.

நான் அந்த புதிய கட்சியை உருவாக்க மாட்டேன், அதனை ஒரு குழுவிடம் ஒப்படைக்கின்றேன்.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அதனைச் செய்ய முடியுமா என்று பார்க்க வேண்டும்.

புதிய கட்சியில் புதிய கருத்துக்களைக் கொண்ட புதுமுகங்களைக் கொண்டு வர வேண்டும்.

மக்கள் புதிய கட்சியையே எதிர்பார்க்கின்றனர்.

ஏனைய கட்சிகளுடன் இணைந்து நாம் தான் இந்த நேரத்தில் நாட்டை கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்பு செய்ய வேண்டும் என ரணில் விக்ரமசிங்க கூறினார்.

(Visited 2 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்