இலங்கை: “ஜனாதிபதி அன்பளிப்பு ”: போலி செய்திகளுக்கு எதிராக அரசு எச்சரிக்கை

“ஜனாதிபதி பிரதானாயா” என்ற தலைப்பில் அரசாங்க உதவித் திட்டத்தைப் பற்றி ஒரு போலி செய்தி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது, மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு குறித்த செய்தியுடன் லிங்க் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.
அரசாங்கத்தின் எந்தவொரு தீர்மானமும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஊடக சந்திப்புகள் மூலம் மட்டுமே அறிவிக்கப்படும்.
பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது, மேலும் சமூக ஊடக பயனர்கள் இதுபோன்ற தவறான தகவல்களைப் பகிர்வதை நிறுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
(Visited 17 times, 1 visits today)