இலங்கை : ஜனாதிபதி ரணிலின் அதிரடி நடவடிக்கை : 4 இராஜாங்க அமைச்சர்கள் அதிரடியாக நீக்கம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நான்கு இராஜாங்க அமைச்சர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அமைச்சுப் பதவிகளில் இருந்து உத்தியோகபூர்வமாக நீக்கியுள்ளார்.
இதன்படி, துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, மின்சாரம் மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா மற்றும் நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் ஆகியோர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அந்த பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) படி, இலங்கையின் அரசியலமைப்பின் 47(3)(a) சரத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)