இலங்கை : ரயில் நிலையத்தில் மின் துண்டிப்பு!

பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மின்சார கட்டணம் செலுத்தாததால் ரயில் நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு நாட்களாக மின்சாரம் இல்லாமல், குப்பி விளக்குகள் மற்றும் பிற உதவிகள் மூலம் நிலையத்தின் பணிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இதனால், ரயில் நிலைய அதிபர்கள், ஊழியர்கள், ரயிலைப் பயன்படுத்தும் பயணிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மின்வெட்டு காரணமாக பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் அறிவிப்புகள் வெளியிடப்படாது என பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
(Visited 10 times, 1 visits today)