ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த தேர்தலிலும் வெற்றிபெறும் : சவால் விடும் நாமல் ராஜபக்ஷ!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதித் தேர்தலில் மட்டுமன்றி எதிர்காலத்தில் நடைபெறவுள்ள எந்தவொரு தேர்தலிலும் வெற்றிபெறும் என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாமல் ராஜபக்ஷ இன்று தலதா மாளிகையில் பூஜை வழிப்பாடுகளில் ஈடுபட்டார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “இப்போது கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எப்போது, இந்த தேர்தலுக்குப் பிறகு, அந்தத் தலைவருக்குப் பிறகு, அந்தக் கட்சிகள் முடிவுக்கு வரும்.
தேர்தலுக்குப் பிறகு, அவர்கள் எதிர் தரப்பில் இருப்பார்கள் ஆனால் வரவிருக்கும் எந்தத் தேர்தலிலும் வெற்றிபெற பொதுஜன பெரமுன தயாராக உள்ளது” எனக் கூறியுள்ளார்.
(Visited 11 times, 1 visits today)





